பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (17:51 IST)
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உடல் நலக் குறைவு காரணமாக  இன்று காலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காய்ச்சல் மற்றும் கண், கால்மூட்டுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இன்று காலை 8:30 மணி அளவில் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு நிதிஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ மனையில் இந்த சிகிச்சை குறித்து சரியான விவரங்கள் ஏதுவும் தெரிவிக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்