ஜீன்ஸ் பேண்ட்டில் தேன் கூடு... அமைச்சர் வெளியிட்ட வீடியோவால் குழப்பம் !

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (16:17 IST)
மத்திய அமைச்சர்  கிரண்ரிஜிஜூ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ஒரு நபரில் ஜீன்ஸ் பேண்டில் தேனிக்கள் கூடு கட்டயுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இது எப்படி இங்கு கூடுகட்டும் என்று குழம்பி வருகின்றனர். 
வடகிழக்கு மாநிலமான நாகலாந்து தேனீக்களுக்கும், தேனுக்கும் பிரசித்தமானது. இம்மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதியை நாகலாந்து தேனிக்கள் தினமாக கொண்டாடுவது வழக்கம்.
 
இந்நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒரு வீடியோவை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு இளைஞனின் பேண்ட் -ன் பின்புறத்தில் தேனிக்கள் கூடு கட்டியுள்ளது. அவரை சுற்றி நிற்போர் அவரை கிண்டலடிக்கின்றனர். 
 
மேலும் இதுகுறித்து அமைச்சர் கூறியுள்ளதாவது தவறான இடத்தில் தேனிக்கள் கூடுக்கட்டுவது நாகலாந்தில் மட்டுமே சாத்தியம் என்று அதில் பதிவிட்டு டுவிட் செய்துள்ளார். 
 
இந்நிலையில் தேனீக்கள் எப்படி பேண்ட்டில் கூடு கட்டும் என நெட்டிஷன்கள் குழம்பி வருகின்றனர். 
 

This is really a Beehive in an unlikely place. This can happen only in Nagaland!
Sources; @MmhonlumoKikon from Nagaland pic.twitter.com/fpqpD5JJku

— Kiren Rijiju (@KirenRijiju) August 21, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்