நாளை வேலை நிறுத்த போரட்டம்: வங்கிகள் திட்டவட்டம்!!

திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:31 IST)
நாளை திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.


 
 
தேசிய வங்கி துறைகளுக்கு எதிராக சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு அதை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது.
 
கடந்த 19 ஆம் தேதி இது குறித்து நடந்த பேச்சு வார்த்தையில், அகில இந்திய வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படததால் நாளை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தில் ஈடுபடவுள்ளனர்.
 
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, உலக போட்டியில் எங்களை இணைத்து செயல்படக்கூடாது, வங்கி கிளைகளை மூடக்கூடாது போன்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து இந்த போரட்டம் நடைபெறவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்