பெங்களூரில் கனமழை… ரூ.225 கோடி நஷ்டமா??

திங்கள், 5 செப்டம்பர் 2022 (16:05 IST)
பெங்களூரில் ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதி இரவுகளில் பெய்த கன மழை, நீர் சரியான வடிகால் இல்லாததால் நீரில் மூழ்கி உள்ளது.


தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பெங்களூரிலும் கனமழை காரணமாக பல பகுதிகளும் வெள்ளக்காடாகி உள்ளது. பிரதான சுரங்க பாதைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெங்களூரில் அதிகனமழை வெளுத்து வாங்கியுள்ளது. விடாமல் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குடியிருப்பு பகுதிகளில் குட்டி அணை கட்டியது போல சுவற்று துவாரங்கள் வழியே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் புல்டோசர்களில் ஏறி நீரோட்டத்தை கடந்து வருகின்றனர். பெங்களூர் வெள்ளம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. 
பெங்களூருவில் உள்ள மத்திய பட்டு வாரியம் மற்றும் கே.ஆர்.புரம் வழித்தடத்திற்கு இடையே உள்ள வெளிவட்டச் சாலையில் (ORR) அரை மில்லியனுக்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் பணிபுரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 17 கிமீ நீளமுள்ள இந்த சாலையில் பல்வேறு சேவைகள் மற்றும் ஒரு மில்லியன் மக்கள் வேலை செய்கின்றனர்.
 
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில், ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதி இரவுகளில் பெய்த கன மழை, நீர் சரியான வடிகால் இல்லாததால் நீரில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக பிரதிநிதித்துவ நிறுவனங்களுக்கு 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மாயிடம், வெளிவட்ட சாலை நிறுவனங்களின் சங்கங்கள் (ORRCA) கடிதம் சமர்ப்பித்துள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்