கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (09:59 IST)
ஹரித்துவாரில் 28 லட்சம் பேர் பங்கேற்ற கும்பமேளாவில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
வட இந்தியாவில், இமய மலை அடிவாரத்தில் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் கும்பமேளா திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. இத்திருவிழாவில் புனித நீராட, இன்று மக்கள் லட்சக் கணக்கில் குவிந்துள்ளனர். மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர். 
 
இந்நிலையில், ஹரித்துவாரில் 28 லட்சம் பேர் பங்கேற்ற கும்பமேளாவில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 நாட்களாக நடைபெற்ற கும்பமேளாவில் 18,169 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியான 102 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்