டெல்லியில் தமிழ் அகாடெமி.. அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிவிப்பு!

திங்கள், 4 ஜனவரி 2021 (10:21 IST)
டெல்லியில் தமிழ் மொழியைப் பரப்ப அகாடெமி அமைக்க உத்தரவிட்டுள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் அரசு.

உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக தமிழ் கருதப்பட்டு வருகிறது. அதற்கு செம்மொழி என்ற அங்கிகாரமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் தமிழ் மொழியைப் பரப்பவும் கலாச்சாரத்தைப் பரப்பவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ் அகாடெமி அமைக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கான  தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும்.

இதற்கு தலைவராக டெல்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்