பிரதமர் மோடி, 2013ம் ஆண்டு நவம்பர் மாதம், குஜராத்தில் முதல் அமைச்சராக இருந்த போது, பிர்லா குழுமத்திடம் இருந்து ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
இதற்காக ஒரு ஆதாரத்தை, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2013ம் ஆண்டு பிர்லா நிறுவனத்தில், வருமானத்துறையினர் சோதனை நடத்திய போது, இந்த ஆதாரம் கிடைத்ததாக கூறப்படுகிறது.