திருமணமான இரண்டு நாளில் புதுமணத் தம்பதியர் தற்கொலை

வியாழன், 23 பிப்ரவரி 2023 (17:14 IST)
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் சந்தோஷி  நகர் என்ற பகுதியில் புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சி நடந்து வருகிறது.

சத்தீஸ்கர் மா நிலம் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்தவர் அஸ்லம்(24 வயது).

இவர், கஷன் பானு என்ற பெண்ணை நீண்ட  நாட்களாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இவர்கள் இருவரின் வீட்டாரின் சம்மதத்துடன்,  கடந்த 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சாஸ்திரி பஜாரில் அமைந்துள்ள சீரத் மைதானத்தில் திருமணம் நடைபெற்றது.

இருவரும் திருமணம் செய்து கொண்ட  நிலையில், செவ்வாய் கிழமை அன்று, வீட்டிற்குள் பயங்கர சத்தம் கேட்டது.

வீட்டில் இருந்தவர்கள் அவர்களின் அறைக்கதவைத் திறக்க முயன்றனர். ஆனால் உள்புறமாக தாழிட்டிருந்ததால், புதுமணத் தம்பதியர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர்.

அதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து, போலீஸுக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி,  வழக்குப் பதிவு செய்து விசாரணை  வருகின்றனர்.

முதற்கட்டமாக, தம்பதியர் இருவருக்குள்ளும், வாக்குவாதம் ஏற்பட்டு, தாக்கிக் கொண்டு, தற்கொலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்