குடிபோதையில் பெண்கள் அட்டூழியம்....போலீஸார் வழக்குப் பதிவு!

திங்கள், 7 நவம்பர் 2022 (20:35 IST)
இந்தூரில் நான்கு பெண்கள் குடிபோதையில் மற்றொரு பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரியில் உள்ள எல்.ஐ.சி திரஹாவ் என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று நான்கு சிறுமியக்ள் குடிபோதையில், மற்றொரு பெண்ணை சரமாரியாகத் தாக்கும் வீடியோ வைரலானதது.

மேலும், அந்த சிறுமியின் செல்போனையும் பிடிங்கி சாலையில் வீசியதாகத் தெரிகிறது.

இந்த வீடியோ வைரலான நிலையில், யாரும் இதுகுறித்துப் புகாரளிக்கவில்லை. ஆனால், போலீஸாரே முன்வந்து 4 சிறுமிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்