சொத்து தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை

Webdunia
புதன், 11 மே 2016 (17:04 IST)
தெலங்கானா மாநிலத்தில் சொத்து விவகாரம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


 

 
தெலங்கானாவில் உள்ள ஆதிலாபாத் மாவட்டம், பைம்சா பகுதியைச் சேர்ந்தவர் சையத் கான். நேற்று அவரது வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த ஒரு கும்பல், வீட்டில் இருந்த சையத் கான் (55) , யூனஸ் கான் (35), அக்ரம் பீ (60), வஹீதா பேகம் (38), ஆயிஷா (12) ஆகிய 5 பேரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
 
இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்றனர். சம்பவம் பற்றி காவல் துறையினர் வழக்கு பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதுகுறித்து விசாரணை நடத்தியத்தில், சொத்து தகராறு மற்றும் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் குற்றவாளிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்