கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு

வியாழன், 12 மே 2022 (19:20 IST)
தமிழகம் உள்பட கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 கேரள மாநிலம் எர்ணாகுளம் முதல் காயங்குளம் என்ற பகுதி வரை ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெறுகிறது 
 
இதன் காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
இந்த ரயில்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளும்படி பயணிகளுக்கு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
பராமரிப்பு பணிகள் முடிந்தபின்னர் மீண்டும் வழக்கம்போல் ரயில்கள் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்