ஒரே நாளில் 19 பேரை காவு வாங்கிய கேரள கனமழை

வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (13:15 IST)
கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று ஒரே நாளில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.  
 
முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  
மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர்.  கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாடெங்கும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. 
 
இந்நிலையில் கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்று ஒரு நாளில் மட்டும் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்