மகாசிவராத்திரி கொண்டாட்டத்தில் விபரீதம்.. மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்...!

Mahendran

வெள்ளி, 8 மார்ச் 2024 (18:35 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் மகாசிவராத்திரி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 14 விலங்குகளை படுகாயம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இது குறித்து ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறிய போது இது மிகவும் சோகமான சம்பவம் என்றும் இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார் 
 
மேலும் ஒரு குழந்தைக்கு 100% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றொரு குழந்தை பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த குழந்தைகளை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். உயர் அழுத்தம் கொண்ட மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்