நாடாளுமன்ற தேர்தல் நடத்த தயார்..! தேர்தல் தேதி எப்போது.? சத்யபிரதா சாகு முக்கிய தகவல்..!

Senthil Velan

புதன், 7 பிப்ரவரி 2024 (21:24 IST)
நாடாளுமன்ற தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயர் அதிகாரிகளிடம் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 

ALSO READ: நாட்டிலேயே முதல்முறையாக பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்.! எந்த மாநிலத்தில் தெரியுமா..?
 
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, நாடாளுமன்றத் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக கூறினார். மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும் என்றும் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்