ஐபிஎல்-2021- பஞ்சாப் அணிக்கு 132 ரன்கள் வெற்றி இலக்கு !

வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (21:37 IST)
ஐபிஎல் தொடரின் 17வது போட்டியான இன்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்த நிலையில் மும்பை  அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில்   விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணிக்கு 131 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நிதானமாக ஆடினார்.தனி ஒருவனாகப் போராடி அவர் 40 பந்துகளில் அரைசதம் அடித்து, 52 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார்.

பஞ்சாப் அணியின் சார்பில் முகமது ஷை, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்