அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை..!

புதன், 22 நவம்பர் 2023 (13:23 IST)
அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் அவரது அவருக்கு தொடர்பான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்த நிலையில் தற்போது மீண்டும் வருமானவரித்துறை அதிகாரிகள், அமைச்சர் ஏ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வழியாகியுள்ளன. 
 
திருவண்ணாமலையில் அமைச்சர் ஏ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாகவும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் இந்த சோதனைக்கு பின்னால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து அமைச்சர் ஏ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்