வளர்பிறை ஞாயிறுகளில் சூரியனுக்கு விரதம்.. கோடி நன்மை கிடைக்கும்..!

Webdunia
சனி, 6 மே 2023 (19:24 IST)
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு விரதம் இருந்தால் கோடி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. 
 
பொதுவாக சூரியனுக்கு விரதம் இருந்தால் மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என்றும் குறிப்பாக வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்தால் மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
வளர்பிறை ஞாயிறு அன்று நெய் விளக்கு ஏற்றி சூரியனுக்கு விரதம் இருந்தால் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. சூரிய பகவானுக்கு விரதம் இருப்பவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றும் கொடிய நோய்கள் எதுவும் வராது என்றும் முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
உடல்நலம் மேம்பட்டு ஆயுள் நீடிக்கும் என்றும் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும் என்றும் செய்வினை போன்ற மாந்திரீகங்கள் சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்