சபரிமலை ஐயப்பன் கோவில், வருடத்தின் பெரும்பாலான நாட்களில் மண்டல காலம் மற்றும் மகர விழா போன்ற முக்கிய கட்டங்களில் மட்டுமல்லாமல், மாதாந்திர பூஜைகள் மற்றும் சில விசேஷ நாள்களிலும் பக்தர்களுக்கு திறக்கப்படுகிறது.
இன்று அதிகாலை, பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கியுள்ளன. பக்தர்கள் ஆராதனையில் ஈடுபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்றைய பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நிறைவடைந்தவுடன், இரவு 10.30 மணிக்கு கோவில் நடை மூடப்படும்.
அதேபோல், ஆனி மாத மாதாந்திர பூஜைகளை முன்னிட்டு ஜூன் 14ஆம் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்து, ஜூன் 15 முதல் 19 வரை ஐந்து நாட்கள் பூரண பூஜைகள் நடைபெறவுள்ளன.