இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாண்டியா பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றும், இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விசாரணை தொடங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.