விநாயக பெருமானின் பரிபூரண அருளை பெற மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் மிகவும் சிறப்பானது. இந்த சதுர்த்தி, மஹா சங்கடஹர சதுர்த்தியை போலவே முக்கியத்துவம் வாய்ந்தது; குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் சதுர்த்தி விசேஷமானது.
காலை சடங்குகள்: விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, வீடு மற்றும் பூஜை அறையைத் தூய்மைப்படுத்த வேண்டும். விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து, விளக்கேற்றி மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும்.
மாலை வழிபாடு: சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மாலையில்தான் பிரதானம். மாலையில் சந்திர தரிசனம் செய்த பிறகு, விநாயகருக்கு மீண்டும் விளக்கேற்றி, அவருக்கு மிகவும் உகந்த அருகம்புல் சார்த்தி வழிபட வேண்டும்.
நைவேத்தியம்: விநாயகருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை (அ) மோதகம் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து, பூஜைக்குப் பிறகு விரதத்தை நிறைவு செய்யலாம்.
மாதந்தோறும் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால், நவகிரக தோஷங்கள் நீங்கும். மேலும், சனி தோஷம், ராகு-கேது தோஷம், மற்றும் திருமணத் தடை உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் சிறந்த பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.