நேற்று அதிர்ச்சி கொடுத்த பங்குச்சந்தை, இன்று மீண்டும் ஏற்றம்.. சென்செக்ஸ் நிலவரம் என்ன?

Siva

புதன், 21 மே 2025 (09:59 IST)
நேற்று காலை நேரத்தில் பங்குச் சந்தையில் மிதமான சரிவு இருந்தாலும், அதன்பின் மதியத்திற்கு மேல் மோசமாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. சென்செக்ஸ் நேற்று 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால், முதலீட்டாளர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நஷ்டம் அடைந்தனர் என்பதும் முக்கியமான தகவலாகும்.
 
இந்த நிலையில், நேற்று முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தை, இன்று மீண்டும் உயர்ந்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
இன்று பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 430 புள்ளிகள் உயர்ந்து, 81,615 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச் சந்தையான நிப்ட்டியும் 133 புள்ளிகள் உயர்ந்து, 24,815 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில், அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, எச்டிஎப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஸ்ரீராம் பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜி, அதானி ஃபோர்ட்ஸ் உள்ளிட்ட சில பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்