ரூ.399 ரீசார்ஜ்... 200% கேஷ்பேக்.... ஆஃபரை அள்ளிவீசும் ஜியோ!!

புதன், 7 பிப்ரவரி 2018 (17:48 IST)
ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் நுழைந்ததில் இருந்து சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனால் ஜியோவின் வாடிக்கையாளர்கள் அதிகரித்தாலும், மற்ற நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன. 
 
தர்போது, ஜியோ நிறுவனம் 200% கேஸ்பேக் ஆஃபர்களை அறிவித்துள்ளது. இதர்கு முன்னர் 100% கேஷ்பேக் ஆஃபரை வழங்கிய ஜியோ தற்போது அடுத்தை படியை எட்டி 200% கேஷ்பேக் அறிவித்துள்ளது.
 
இதன்படி, ரூ.399-க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், 50 ரூபாய் மதிப்பிலான எட்டு ரீசார்ஜ் வவுச்சர்கள் வழங்குகிறது. இவ்வாறு முதலில் ரூ.400 கேஸ்பேக் கிடைக்கிறது. 
 
பின்னர், ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்யும் போது, முன்பு கிடைத்த வவுச்சர்களைப் பயன்படுத்தி, 400 ரூபாய் குறைத்துக் கொண்டு, மீதம் 399 ரூபாயை செலுத்த வேண்டி இருக்கும். 
 
ஆனால், இந்த ரூபாயையும் பேடிஎம், மொபிவிக், அமேசான் போன்றவற்றில் கேஷ்பேக் பே பேலன்ஸ் ஆக ஜியோ கொடுத்துவிடுகிறது. இவ்வாறு ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால், ரூ.799-க்கு சேவைகளை அனுபவிக்கலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்