அதிரடியில் இறங்கிய ஜியோ: பிரைம் திட்டத்தில் கூடுதல் டேட்டா

சனி, 4 மார்ச் 2017 (12:38 IST)
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 5GB டேட்டா வழங்கப்படுகிறது.


 

 
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை மார்ச் மாதத்துடன் முடியவடைகிறது. ஏப்ரல் மாதல் கட்டணம் சேவை தொடர்கிறது. இதற்கான பட்டியலை ஏற்கனவே ஜியோ நிறுவனம் வெளியிட்டது. ஜியோ பிரைம் திட்டத்தில் இணைபவர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஜியோ பிரைம் திட்டத்தில் இணைய ரூ.99 கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பிறகு மாதம் வாடிக்கையாளர்கள் தங்களது தேவை ஏற்ப கொடுக்கப்பட்டுள்ள பிளானை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
 
ஜியோ இவ்வகையான அதிரடி திட்டங்களை தொடர்ந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள ஏராளமான திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஜியோ மீன்ஊம் கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்த கூடுதல் டேட்டா சலுகை பொருந்தும். ரூ.303க்கு ரிசார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதலாக 5GB டேட்டா வழங்கப்படும். ரூ.499க்கு ரிசார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதலாக 10GB டேட்டா வழங்கப்படும்.
 
மேலும் இந்த கூடுதல் டேட்டா சலுகை முதல் மாதத்திற்கு மட்டுமே வழகப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்