தோனி இல்லாமல் சென்னை கிங்ஸ் அணி இல்லை !

திங்கள், 18 அக்டோபர் 2021 (17:35 IST)
ஐபிஎல் 14 வது சீசனில் சென்னை கின்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து  கடந்த ஆண்டு ஓய்வு பெற்றாலும் தோனி இல்லாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பாகவே ரசிகர்கள் கருதினர். ஆனால் அவர் கடந்த முறை ஐபிஎல் போட்டியில் சோபிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதற்குப் பதிலடியாக இம்முறை சென்னை அணி ஐபிஎல்-14 வது சீசன் கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல்-15 வது சீசனில் தோனி சென்னை அணிக்கு விளையாடுவார அல்லது ஓய்வு பெறுவாரா என பலரும் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த சென்னை அணியின் தலைவர் சீனிவாசன், தோனி இல்லாமல் சென்னை அணி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்