18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த துயர சம்பவம் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “ஆர் சி பி அணி முன்பே கோப்பையை வென்றிருந்தால் இப்படி ரசிகர்கள் அதீத உணர்ச்சிப் பெருக்கோடு இருந்திருக்க மாட்டார்கள். மற்ற அணிகள் கோப்பை வென்ற போது கொண்டாட்டங்கள் குறைவாகவே இருந்தன. ஈ சாலா கப் நம்தே என்ற வாசகம் அந்த அணியின் கழுத்தை சுற்றிக் கொண்டே இருந்தது. அதனால் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் அவர்களுக்கு இருந்தது. அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும் என ரசிகர்கள் நினைத்தனர். இந்த துயர சம்பவத்தில் வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இன் இரங்கல்கள்.” எனக் கூறியுள்ளார்.