எது பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கா?... சிஎஸ்கே பயிற்சியாளர் சொன்ன கருத்து!

vinoth

புதன், 9 ஏப்ரல் 2025 (14:30 IST)
இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் அடுத்தடுத்து போட்டிகளில் தோற்று புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்தில் உள்ளன. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடித் தோல்வி அடைந்தது.

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது தோல்வியாகும். முதல் போட்டியை வெற்றிகரமாக முடித்த சிஎஸ்கே அதன் பின்னர் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி நிர்னயித்த 220 ரன்கள் இலக்கைத் துரத்திய சி எஸ் கே அணி 201 ரன்கள் மட்டுமே தோல்வியை சந்தித்தது. இது சென்னை அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது தோல்வியாகும்.

இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ள கருத்து சென்னை அணி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் “எங்கள் அணியின் பேட்டிங் முன்னேறியுள்ளது. இந்த போட்டியை நாங்கள் ஃபீல்டிங்கில் செய்த சொதப்பல்களால்தான் தோற்றோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்