இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் அடுத்தடுத்து போட்டிகளில் தோற்று புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்தில் உள்ளன. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடித் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் சி எஸ் கே அணி இலக்கை துரத்திய போது 19 ஆவது ஓவரில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவன் கான்வே ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவரால் நேற்று பந்துகளை அதிரடியாக ஆடி பவுண்டரிகள் ஆடமுடியவில்லை என்பதால் அந்த முடிவை எடுத்துள்ளனர். இதே போல சில போட்டிகளுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி திலக் வர்மாவை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படி வீரர்களை வெளியேற்றுவது கிரிக்கெட்டுக்கு அழகல்ல என ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.