சர்வதேசக் கிரிக்கெட் ஓய்வுக்குப் பிறகு LLC ல் இணைந்தார் ஷிகார் தவான்!

vinoth

திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (15:30 IST)
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே இடமளிக்கப்படவில்லை. அவரின் வயது மற்றும் ஃபார்ம் காரணமாக அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் அணிக்குள் வாய்ப்பளிக்கப்பட்டார்கள். அதில் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் இப்போது நிரந்தர வீரர்களாக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் தவான் தற்போது ஓய்வை அறித்துள்ளார்.

இது சம்மந்தமாக  அவர் வெளியிட்ட வீடியோவில் “இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, ​​​​எனக்கு நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன என்றும் எனக்கு ஒரே ஒரு கனவு இருந்தது, அது இந்தியாவுக்காக விளையாட வேண்டும், நான் அதை அடைந்தேன்.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்துள்ளார். செப்டம்பர் மாதம் இந்த தொடர் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்