என் மகனின் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல்: சச்சின் பெருமிதம்!

வெள்ளி, 8 ஜூன் 2018 (11:53 IST)
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் 19 வயதுக்குள்ளான இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ளார். 
 
வரும் ஜூலை மாதம் இந்த அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் அர்ஜுன் தெண்டுல்கரும் இலங்கை அணியுடன் மோதவுள்ள வீரர்களில் ஒருவர். 
 
அர்ஜுன் தெண்டுல்கர் இடதுகை மீடியம் பேஸ் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதை குறித்து சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் என் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜூன் வெற்றியடைய நானும், எனது குடும்பத்தினரும் பிரார்த்திப்போம். அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்