தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

vinoth

திங்கள், 14 ஏப்ரல் 2025 (12:38 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் கேப்டன் ருத்துராஜ் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

ருத்துராஜின் விலகலுக்குப் பின்னால் சந்தேகம் உள்ளதாக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ருத்துராஜ், களத்தில் தோனியின் ஆலோசனைகளைக் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு, போட்டிகளில் தோற்றதால்தான் அவர் தொடரில் இருந்தே விலக்கப்பட்டுள்ளார் என்றும் அது சம்மந்தமாக சில வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் விதமாக ருத்துராஜ், இன்ஸ்டாகிராமில் தோனியை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். இதைக் காரணமாக காட்டி அணிக்குள் தோனிக்கும், ருத்துராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக ஊகங்கள் பரவ ஆரம்பித்துள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்