இந்நிலையில் ரோஹித் ஷர்மா குறித்து கவாஸ்கர் ஒரு முக்கியமானக் கருத்தைப் பேசியுள்ளார். அதில் “ரோஹித் ஷர்மா களத்தில் 25 ஓவர்கள் வரை நிற்கவேண்டும். அப்படி நின்றால் இந்திய அணியால் நல்ல ஸ்கோரை எட்ட முடியும். அதிரடியாக விளையாடுகிறேன் என்று மைதானத்துக்கு சென்று பேட்டை சுழற்றுவது ஒரு வழி என்றால் 25 ஓவர்கள் வரை களத்தில் நிற்பது இன்னொரு வழிமுறை. அவர் 25, 30 ரன்கள் அடித்தால் போதும் என்று திருப்தி அடைந்துவிடக் கூடாது.” எனக் கூறியுள்ளார்.