சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா

vinoth

திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (09:34 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இடம் இந்தியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 240 என்ற மிக எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ரோஹித் ஷர்மா அமைத்துக் கொடுத்தும் அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொத்ப்பியதால் இந்திய அணி 208 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்த போட்டியில் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆடி 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேசப் போட்டிகளில் சச்சினின் சாதனை ஒன்றை தகர்த்துள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் (120 முறை) முதலிடத்தில் இருந்தார். அவரை முந்தி ரோஹித் ஷர்மா (121 முறை) இப்போது முதலிடத்துக்கு சென்றுள்ளர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்