2வது ஒருநாள் கிரிக்கெட்: முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த சிராஜ்.. இலங்கை ஸ்கோர்..!

Siva

ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (17:43 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

அந்த அணி சற்று முன் வரை 44 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இலங்கை அணியின் தொடக்க ஆட்டகாரர் நிசாங்கா,  ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிராஜ் பந்தில் அவுட் ஆனார். இதனையடுத்து பெர்னாண்டோ 40 ரன்களும், மெண்டிஸ் 30 ரன்களும் எடுத்துள்ளனர்.

 இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அக்சர் பட்டேல், சிராஜ் மற்றும் குல்திப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்

 முன்னதாக இந்தியா இலங்கை இடையே நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எந்த அணிக்கும் வெற்றி தோல்வி இன்றைய சமனில் முடிந்த நிலையில் இன்றைய போட்டியின் முடிவு தொடரை வெல்ல முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்