இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்.. 4 மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுக்கள்..!

Mahendran

வியாழன், 26 ஜூன் 2025 (17:53 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 
இந்திய அணி வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து  3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.
 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த்தில், அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 25 ஆகிய தேதிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் முறையே அடிலெய்டு மற்றும் சிட்னியில் நடைபெறுகின்றன. இதன் பின்னர், அக்டோபர் 29 முதல் டி20 தொடர் தொடங்குகிறது.
 
இந்தத் தொடர் தொடங்க இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
 
இரு அணிகளுக்கும் இடையிலான அனைத்து 8 போட்டிகளுக்கும்  டிக்கெட்டுகள் விற்பனை முடிந்துவிட்டது.  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு விற்பனையான மொத்த டிக்கெட்டுகளில் 16 சதவிகித டிக்கெட்டுகளை இந்திய ரசிகர் மன்றங்கள் வாங்கியுள்ளன என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்