இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்றுள்ளன. இரு போட்டிகளுமே அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டிகளாக அமைந்துள்ளன. இதற்கு முக்கியக் காரணமாக மைதானம் மிகவும் தட்டையாக அமைக்கப்படுவதுதான் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.