இரட்டை ஆதாயம் பெறுகிறாரா கோலி? – பரபரப்பு புகார்!

திங்கள், 6 ஜூலை 2020 (07:57 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி இரட்டை ஆதாயம் பெறுவதாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனான கோலி, தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் நம்பர் ஒன் வீரராக அனைத்து விதமான போட்டிகளிலும் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் இந்திய கிரிக்கெட் வீரராகவும் இருந்து கொண்டு சக வீரர்களின் வர்த்தக விஷயங்களை கையாளும் ஒரு நிறுவனத்துக்கும் இயக்குனராக இருப்பதாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த சஞ்ஜீவ் குப்தா பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார்.

கோலி மீதான அவரது புகார் ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சம்மந்தமாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்