இந்த நிலையில் பும்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, "நானும் போட்டிகளை ஏற்று போராடி வெல்ல விரும்புகிறேன். ஆனால் விளையாட்டு மரியாதையை மீற விரும்பவில்லை. ஆரம்பத்தில் எனக்குப் பயிற்சியாளர்கள் இல்லாததால், தொலைக்காட்சி பார்த்து தான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். சிலர்போல் எதிரணியை தூண்டும் நோக்கில் செயல்பட முயற்சி செய்ததுண்டு, ஆனால் அது எனக்குப் பொருந்தவில்லை. கோபத்தில் பந்து வீசுவது என் விதியல்ல. சிந்தனையோடு செயல்படுவது தான் என் வழி. வெற்றிக்கு ஆனந்தப்படலாம், ஆனால் அதற்காக நமக்கு ஏற்புடையமற்ற முறையில் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை."