இந்திய 325 ரன்களுக்கு ஆல் அவுட்!!

சனி, 4 டிசம்பர் 2021 (13:28 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மும்பை டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 
 
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மும்பை டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. நான்கு விக்கெட்களை இழந்த பின் இன்றைய ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. 
 
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய 325 ரன்களுக்கு ஆல் அவுட் செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் மயங்க அகர்வால் 150 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்