ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக 109 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 441 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியுள்ளது. இதுவரை கேப்டனாக பொறுப்பேற்று டெஸ்ட் போட்டியில் எந்த தோல்வியையும் சந்திக்காமல் இருந்து வரும் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த பெரிய சிக்கலில் இருந்து தப்பிக்குமா என்பதே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.