தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் முகத்துக்காகவே ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்பான்சர்கள் கிடைப்பதாகவும், அதிக டிக்கெட்கள் விற்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரைக் கௌரவிக்கும் விதமாக ஐசிசி ஹால் அஃப் ஃபேம்-ல் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இது கிரிக்கெட்டின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த பெருமையைப் பெறும் 11 ஆவது இந்தியக் கிரிக்கெட் வீரர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன்பாக இந்தியா சார்பாக பிஷன் சிங் பேடி, கபில் தேவ், சுனில் கவாஸ்கர், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வினோத் மன்கட், டையானா எடுஜி, வீரேந்தர் சேவாக், நீத்து டேவிட் ஆகியோர் இந்த பெருமையைப் பெற்றுள்ளனர்.