ஆசியக் கோப்பை தொடர் முழுவதும் நடக்குமா? இலங்கையில் வெளுத்து வாங்கும் மழை!

திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:16 IST)
ஆசிய நாடுகள் கலந்துகொள்ளும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த தொடரில் முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டி மழையால் முடிவில்லாமல் போனது.

இந்த சுற்றின் சூப்பர் 4 போட்டிகள் முழுவதும் இலங்கையில் நடக்க உள்ளன. ஆனால் இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும்மழை பெய்து வருகிறது. மேலும் 10 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆசியக் கோப்பையின் அடுத்த கட்ட போட்டிகள் முழுவதும் நடக்குமா அல்லது மழையால் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்