இந்த தொடரில் இந்திய அணியில் ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஜெய்ஸ்வால், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்றவர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டெஸ்ட் அணியின் பலத்தை நிரூபித்துள்ளனர்.
இந்த தொடரில் இரண்டு தொடர்நாயகன் விருதுகள் அளிக்கப்பட்டன. இந்திய அணி சார்பாக ஷுப்மன் கில் இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்ட்டன் மெக்கல்லத்தால் தேர்வு செய்யப்பட்டார். அதே போல இந்திய அணி பயிற்சியாளரால் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்த தேர்வு சர்ச்சைகளைக் கிளப்பியது. ப்ரூக்கை விட ரூட் எல்லாவிதத்திலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.