விவாகரத்துக்கு முன்பே ஜாஸ்மினுடன் காதலில் இருந்தாரா பாண்ட்யா… ஹிஸ்டரியைத் தோண்டும் ரசிகர்கள்!

vinoth

வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (07:58 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- நடாஷா திருமண வாழ்வில் சில மாதங்களுக்கு முன்னர் விரிசல் எழுந்தது. ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்தை அறிவித்தனர்.

நடாஷா தனது மகனோடு செர்பியாவுக்கு சென்றுவிட்ட நிலையில் ஹர்திக் இப்போது பிரிட்டனைச் சேர்ந்த பாடகியான ஜாஸ்மின் வாலியாவை டேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இருவரும் ஒரே நட்சத்திர ஹோட்டலின் நீச்சல் குளத்தருகே எடுத்துக் கொண்டு வெளியிட்ட புகைபடங்கள் இந்த ஊகத்தை கிளப்பியுள்ளன. மேலும் ஒருவருக்கொருவர் சமூகவலைதளங்களில் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். 

இந்த விவகாரம் ரசிகர்கள் இடையே சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஐபிஎல் தொடரின் போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியைப் பார்க்க வந்துள்ளார். இதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதே போல சமீபத்தில் இலங்கை டி 20 தொடரில் பாண்ட்யா விளையாடும் போது ஜாஸ்மின் இலங்கையில் இருந்துள்ளார். இதெல்லாம் வைத்துப் பார்க்கையில் நடாஷா ஹர்திக் விவாகரத்துக்கு முன்பாகவே இவர்களுக்குள் நட்பு தொடங்கிவிட்டதோ என்று ரசிகர்கள் ஊகங்களைக் கிளப்பி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்