அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கூடுதல் போட்டிகள்… பிசிசிஐ எடுக்கும் அதிரடி முடிவு!

vinoth

வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (17:37 IST)
உலகக் கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் லீக் தொடராக ஐபிஎல் தொடர் உள்ளது. இதில் விளையாட உலகில் உள்ள அனைத்து வீரர்களும் ஆர்வமாக உள்ளனர். ஏனென்றால் ஒரு ஆண்டு முழுவதும் சர்வதேசக் கிரிக்கெட் ஆடி சம்பாதிக்கும் பணத்தை இரண்டே மாதங்களில் ஐபிஎல் விளையாடுவதன் மூலமாக சம்பாதித்து விடுவார்கள்.

இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு அடுத்த ஆண்டு மெஹா ஏலம் நடத்தப்பட்டு வீரர்கள் ஏலத்தில் விடுவிக்கப்பட்டு புது அணிகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் சில அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அடுத்த ஐபிஎல் தொடரில் கூடுதல் போட்டிகள் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் 74 போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் அடுத்த தொடரில் 84 போட்டிகள் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்