சச்சினுக்குப் பிறகு ரோஹித் ஷர்மாதான்… 27 ஆண்டு கால பெருமை தகர்ப்பு!

vinoth

வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (07:59 IST)
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. டி 20 உலகக் கோப்பையை வென்ற ஒருமாதத்துக்குள்ளாகவே முழு பலம் கொண்ட இந்திய அணி இலங்கையிடம் தொடரை இழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதன் மூலம் 27 ஆண்டுகளாக இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை இந்திய அணி இழந்துள்ளது. 1997 ஆம் ஆண்டு சச்சின் தலைமையிலான இந்திய அணி, இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்தது.

அதன் பின்னர் கங்குலி, டிராவிட், தோனி, கோலி ஆகிய எந்த கேப்டனும் இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரை இழக்காத நிலையில் தற்போது ரோஹித் ஷர்மா அந்த மோசமான சாதனைக்கு சொந்தக் காரர் ஆகியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்