தகாத இடத்தில் கைவைத்தாரா போனி கபூர்? என்ன சொல்கிறார் ஊர்வசி...

புதன், 3 ஏப்ரல் 2019 (08:07 IST)
போனி கபூர் மீது கிளம்பிய சர்ச்சை குறித்து பாலிவுட் நடிகை ஊர்வசி விளக்கமளித்துள்ளார்.
50 ஆண்டுகளாக திரைத்துறையில் ஜொலித்து வந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் , டோலிவுட் , என 5 மொழிகளிலும்  கலக்கினார் . இவர் 1996ம் ஆண்டு பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்களுக்கு தாயானார் .  கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி ஸ்ரீதேவி மாரடைப்பாடல் இறந்தார்.
 
இதனையடுத்து போனிகபூர் தற்போது பல படங்களை தயாரித்து வருகிறார்.
 
இந்நிலையில் விழாவில் கலந்துகொண்ட அவர் பிரபல நடிகை ஊர்வசியை தகாத இடத்தில் தொட்டதாக செய்தி வெளியானது. அத்தோடு ஒரு வீடியோவும் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. போனி கபூரை பலர் ட்ரோல் செய்து வந்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்த ஊர்வசி, ஏன் இப்படி தேவையில்லாமல் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறீர்கள். போனிகபூர் ஒரு ஜெண்டில்மேன். அவரை ஏன் இப்படி விமர்சனம் செய்கிறீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்