குத்து வாங்கியும் கொள்ளையர்களை விரட்டிய நடிகை

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (13:01 IST)
இந்தியாவின் செக்ஸ் சிம்பல் மல்லிகா ஷெராவத்தை பாரிஸ் நகர கொள்ளைக்காரர்கள் உடல்ரீதியாக துன்புறுத்தி கொள்ளையடித்துச் செல்ல முயன்ற விஷயம் தற்போது வெளியாகியுள்ளது. 


 
 
கடந்த 11-ம் தேதி நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், பாரிஸில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த மல்லிகா ஷெராவத்தின் கைப்பையை திருட முயன்ற முகமூடி கொள்ளையர்கள் அவர் முகத்தில் குத்தி காயப்படுத்தியதுடன், கண்ணீர் புகை ஸ்பிரே தெளித்ததாகவும் பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இவ்வளவு நடந்த பிறகும் தனது பையை திருடர்கள் கவர்ந்து செல்ல மல்லிகா ஷெராவத் அனுமதிக்கவில்லையாம்.
 
மல்லிகாவா கொக்கா...?
அடுத்த கட்டுரையில்