என் சாபம் உன்ன சும்மா விடாது... புது காதலியுடன் நாக சைதன்யா!

செவ்வாய், 29 நவம்பர் 2022 (11:21 IST)
சமந்தா ரசிகர்கள் நாக சைதன்யாவின் போட்டோவை கண்டு கடுப்பாகிவிட்டனர். 
 
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதற்கு காரணம் சமந்தாவின் வளர்ச்சி தான். அவரது தொடர் வெற்றிகளை சைதன்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
 
இதையடுத்து சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். திடீரென மயோசிஸ் என்ற அரியவகை தசை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். 
 
சமந்தா இப்படி இருப்பதற்கு காரணம் முன்னாள் கணவர் தான் என ரசிகர்கள் வெறுப்பு தெரிவித்தனர். இப்படியான நேரத்தில் நாகசைதன்யா தனது புது காதலி சோபித துலிபாலாவுடன் இருக்கும் போட்டோ ஒன்று இணயத்தில் வெளியாகியுள்ளது. எங்க சாபம் உங்கள சும்மா விடாது என சமந்தா ரசிகர்கள் செம கடுப்பாகி கூறி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்