IND vs BAN: ரோகித் சர்மா 100வது டி20 போட்டியில் அசத்தல் ஆட்டம்

வெள்ளி, 8 நவம்பர் 2019 (21:50 IST)
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து - 100வது டி20 போட்டியில் அசத்திய ரோகித் சர்மா
 
இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
 
மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியை வங்கதேசம் வென்ற நிலையில், தற்போது தொடர் சமன் ஆகியுள்ளது.
 
முதலில் பேட் செய்த வங்கதேசம், 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 15.4 ஓவர்களில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்தது.
 
தனது 100வது டி20 போட்டியில் விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். இன்னும் 15 ரன்கள் எடுத்திருந்தால் தனது ஐந்தாவது டி20 சதத்தை அடைந்திருப்பார் ரோகித் சர்மா.
 
ஷிகர் தவன் 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணிக்காக மொகமது நயீம் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.
 
இந்தியாவின் இரண்டு விக்கெட்டுகளையும் அமினுல் இஸ்லாம் வீழ்த்தினார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்