கோவிட்: மாடர்னா தடுப்பூசியின் வடிவத்தை சொந்தமாக தயாரிக்கும் ஆப்ரிக்கா

சனி, 5 பிப்ரவரி 2022 (00:11 IST)
தென்னாப்ரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மாடர்னா கொரோனா தடுப்பூசியின் பதிப்பை சொந்தமாக தயாரித்துள்ளனர்.
 
இது ஆப்ரிக்கா முழுவதும் தடுப்பூசி விகிதங்களை அதிகரிக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
 
இந்த கண்டம் தற்போது உலகிலேயே மிக குறைவான கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றுள்ளது.
 
புதிய தடுப்பூசியின் பின்னால் உள்ள நிறுவனமான ஆஃப்ரிஜென் பயோலாஜிக்ஸ் நவம்பரில் மருத்துவ பரிசோதனைகளை தொடங்கும் என்று நம்புகிறது. இதற்கு முன்பு மாடர்னா நிறுவனம் அதன் தடுப்பூசிக்கான பேட்டன்ட் உரிமையை வெளியார் மீது திணிக்க மாட்டோம் என்று கூறியிருந்தது. இதையடுத்து கேப் டவுனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மாடர்னாவின் மறுபதிப்பை அனுமதிக்கிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்